ஒரு நூறும் புகுக!
எண்பதுகளில்-
அடி
எடுத்துவைக்கும்
எம்மைக்கும்
எந்தையே!
நான்
மணிகளின்
தந்தையே!
உம்மை
வாழ்த்துவதிலில்லை
விந்தையே!
தமிழ்
கொண்டு
தமிழ்
எட்டு- என
சொல்லுவது
என்
சிந்தையே!
ஆமூர்
நகரத்தின்
ஆலமர
விதையே!
அச்சம்மா
எனும்
சீதையிட்ட
விதையே!
கிருஷ்ணசாமி
பிள்ளையே!
நின்பார்
நிலை
பெற்றது
பல
குலம் - அஃது உன் வித்தையே!
நீ
கண்டதோ
பெரியாரின்
தடி
அண்ணாவின்
பொடி
கலைஞரின்
வசனப் பொடி!
தனை
கொண்டு
செய்தாய்
பிள்ளைகளை
இப்படி
இப்படி
பல படி
ஏறி
வந்த நீ- ஏணிப்படி!
புகழால்
வாழ்ந்தபடி
உங்கள்
வாழ்வு தழைத்தப்படி
என்
தமிழின் சொற்படி
உன்
வாழ்வு ஏறுக பல ஏணிப்படி!
என்றடி
கூற்றடி படி
என்றும்
வாழி! வாழி!- என
தமிழால்
வாழ்த்திடுவேன்!
தலையால்
வணங்கிடுவேன்!
உம்மை
வாழ்த்த என்
வயது
சிறிது!
தண்டமிழோ
பெரிது!
தனை
கொண்டு
வாழ்த்துவேன்!
தமிழுக்கு
உம்மை வாழ்த்த
தரமுண்டு-
வாழ்த்திய வண்ணம்
தழைக்க
நீ- பல
தலைமுறை
கண்டு!
எம்மைக்கும்
எந்தையே
என்
தாத்தாவே!
உன்
உடல்
வலிவும்
மன
வலிவும்
மெம்மேலும்
மிகுக!!
நீ ஒரு நூறும் புகுக!!!
என்றும் அன்புடன்
மோ. மனோஜ் மண்டேலா
அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவன்
சால் அன்பும் வீண்!
No comments:
Post a Comment