Saturday, May 12, 2012

ஒரு நூறும் புகுக!


ஒரு நூறும் புகுக!
எண்பதுகளில்- அடி
எடுத்துவைக்கும்
எம்மைக்கும்
எந்தையே!
நான் மணிகளின்
தந்தையே!
உம்மை வாழ்த்துவதிலில்லை
விந்தையே!
தமிழ் கொண்டு
தமிழ் எட்டு- என
சொல்லுவது என்
சிந்தையே!

ஆமூர் நகரத்தின்
ஆலமர விதையே!
அச்சம்மா எனும்
சீதையிட்ட விதையே!
கிருஷ்ணசாமி பிள்ளையே!
நின்பார்
நிலை பெற்றது
பல குலம் - அஃது உன் வித்தையே!

நீ கண்டதோ
பெரியாரின் தடி
அண்ணாவின் பொடி
கலைஞரின் வசனப் பொடி!
தனை
கொண்டு
செய்தாய்
பிள்ளைகளை இப்படி
இப்படி பல படி
ஏறி வந்த நீ- ஏணிப்படி!
புகழால் வாழ்ந்தபடி
உங்கள் வாழ்வு தழைத்தப்படி
என் தமிழின் சொற்படி
உன் வாழ்வு ஏறுக பல ஏணிப்படி!
என்றடி கூற்றடி படி
என்றும் வாழி! வாழி!- என
தமிழால் வாழ்த்திடுவேன்!
தலையால் வணங்கிடுவேன்!
உம்மை வாழ்த்த என்
வயது சிறிது!
தண்டமிழோ பெரிது!
தனை கொண்டு
வாழ்த்துவேன்!
தமிழுக்கு உம்மை வாழ்த்த
தரமுண்டு- வாழ்த்திய வண்ணம்
தழைக்க நீ- பல
தலைமுறை கண்டு!

எம்மைக்கும் எந்தையே
என் தாத்தாவே!
உன்
உடல் வலிவும்
மன வலிவும்
மெம்மேலும் மிகுக!!
நீ ஒரு நூறும் புகுக!!!

 





என்றும் அன்புடன்
மோ. மனோஜ் மண்டேலா



அன்பின் கண் சிவம்- என்று
இன்-சகத்து இல்லாவிடின்- சிவன்
சால் அன்பும் வீண்!

No comments:

Post a Comment