புதுமனை புகுவிழா வாழ்த்து!
கூடுதன்
ஓடு உடைத்து
சிறகடித்து பறக்கும்
பறவை உனக்கு
உன்வெற்றி புகழும்
வாழ்த்திது!
தமிழ்கூறும் தொல்லுலகத்து மக்கள்தோறும்,
இங்கோ! ஏன் தொல்லுலகமென்று வியப்பெழலாம்?
தமிழ்கூறும் நல்லுலகமன்றோ இதுவென்று- என் செய்வது
இங்கோ தமிழோர் சிலரே! ஆள்பவரும் இல்லை தமிழர்!
தமிழை ஆள் வோரும் இல்லை!
தொல்லுலகத்திலோ தமிழர் இருந்தனர்- அதன்
பொருட்டு இங்கோ நல்லுலகம் ஏது? ஆதலால் தொல்லுலகம்!
அதன் மக்கள் கூறும் தமிழ் வாழ்த்து!
உன் வெற்றிகண்டு கண்மூடுகையில்
சிந்தனையில் சிக்கியது இரகிசயம்!
அரவம்தன் நிவர்த்தி!!
அரங்கநாதனின் கீர்த்தி!!!
உணவு, உடை, இல்லம் முறையே
செய்தாய் நீ முறையே!
துணை வருவான் இறையே- என்றும்
துணை உன்னக்கு அவனே!
இரகசியம் இஃது இடம் போருலேவல் என்றால்- இடம்
சிந்தை அன்றோ? அங்கே கண்டாய்
ஓர் இல்லம்! தன பொருட்டு வாழ்த்து!
வெண்பா எழுத கேட்டான் கண்ணன்!
பண்பா செய்திடுக என்றான் இம்மன்னன்!
அன்பா செப்பிடேன் ஓர் வாழ்த்து- தமிழ்
வெண்பா எதற்கினி என்று?!
அளபெடை எழுத இங்கோ அணியில்லை
தேமா புளிமா இங்கே தேவையுமில்லை!
தமிழ் உதித்தேழும் காலம்தோறும்- அழகிய
எழில் கலந்தோடி வாழி!
தமிழுனர்வோடு வாழி!
செயல்திறன் கொண்டு வாழி!
இலக்கணம் பொருள்பட வாழி!
அன்போடு வாழி!!!
என்றும் அன்புடன்,
மோ. மனோஜ் மண்டேலா
11 September 2011
(on occasion of Home Warming Ceremony of Aravind Sankaranarayanan)